Monday, January 10, 2011

ஹைக்கூ கவிதை

காதலுக்கு கண் இல்லை

கூடல்.காம்
மனிதன் கடவுளாக...
காதலியின் கடிதம் தரும்
தபால்காரர்! 
 

தொழிற்கல்வி

கூடல்.காம்
மூட்டை தூக்கிக் கொள்ள
முன்பயிற்சி
நர்சரிப் பள்ளிகள் ... 
 

ஈர நினைவு

கூடல்.காம்
மேகத்திலிருந்து மழைத்துளி
துவட்டப்படாத அவள்
கூந்தல்! 
 

வயிற்றுப் பசி

கூடல்.காம்
மரக்கிளையில் தொட்டில்
களையெடுக்கும் தாய்
தொட்டில் குழந்தை 
 

இன எதிரி

கூடல்.காம்
கோடாரியின் கைப்பிடியிலும்
மரம்
இன எதிரி ... 
 

தலைகீழ்

கூடல்.காம்
மிதப்பதாக நினைத்து
மூழ்கினான்
குடிகாரன் ... 
 

எங்கும் உன்னோடு

கூடல்.காம்
வழிப்பயணம் முன்னோக்கி
நினைவுகளோ பின்னோக்கி
அவளை விட்டுப் பிரிகையில்! 
 

விடாது மழையிலும்

கூடல்.காம்
புயலுக்குப் பிறகு,
சிறுவன் ஆகாயத்தைத் துடைக்கிறான்.
மேசைகளின் மீதிருந்து!
 
 
 
 
 
 
 
 
 

1 comment:

  1. நன்றி
    அன்புடன்
    கவிஞர் இரா .இரவி

    www.eraeravi.com
    www.kavimalar.com
    www.eraeravi.wordpress.com
    www.eraeravi.blogspot.com
    http://eluthu.com/user/index.php?user=eraeravi
    http://en.netlog.com/rraviravi/blog
    இறந்த பின்னும்
    இயற்கையை ரசிக்க

    கண் தானம் செய்வோம் !!!!!

    ReplyDelete