Monday, January 10, 2011

பட்டினி

மு. கார்த்திக்
எந்த அரிசியிலும்
என் பெயரில்லை போலும்
பத்துநாள் பட்டினி!

வறுமை

சபி. ஆன்சி
என் சட்டையைப் பார்
அந்தத் தையல்களில் தான்
என் வறுமை வரையப்பட்டுள்ளது.

சருகு

மு. கார்த்திக்
உதிரும் இலையைப் பார்த்து
நகைத்தது! மலரத் தொடங்கிய
சருகு!

வெயில்

செல்வகாந்தன்
நிழல் தரும் மரங்கள்
எப்படித் தாங்குமோ
வெயிலை

பாவம் நாற்காலி
நாம் அமர
அது நிற்கிறது 



No comments:

Post a Comment